Sunday, June 20, 2021

சொல்லணும்னு தோணிற்று

 

கொஞ்ச நாளைக்கு முன்னாடி சிலர் அரசாங்கம் இப்படி செய்ய கூடாது அது இதுன்னு பேசிட்டு இருந்தாங்க. ஒவ்வொருவர் வாய். அவரவர் இஷ்டத்துக்கு பேசத்தான் செய்வாங்க. எந்த காரியம் செய்வதாக இருந்தாலும் நான் செய்வது அடுத்தவனுக்கு பிடிக்காது. அடுத்தவன் செய்வது எனக்கு பிடிக்காது கதை தான். இது இயல்பு. இதை மாற்ற இயலாது..

 

அரசாங்கம் செய்றது நல்லதா கெட்டதா அப்படிங்கற வாதத்துக்கு அப்புறம் வருவோம். பொதுவாக எனக்கு மற்றவர்களை குற்றம் சொல்றத விட நாம என்ன செய்தோம்  அப்படின்னு சுயபரிசோதனை செய்றது தான் உத்தமம் ன்னு நினைக்க கூடிய ஆள் நான்.

 

ஒரு அறுபது எழுபது ஆண்டுகளுக்கு முன்னால் இருந்து பலர்  பிழைப்புக்காகவும், பணி நிமித்தம் காரணமாகவும் சொந்த ஊர் விட்டு வெளியூர் சென்றார்கள். சிலர் மொத்தமா ஊரே வேண்டாம். இந்த ஊர் உருப்பட வாய்ப்பில்லைன்னு சொல்லிட்டு போயிட்டாங்க. அங்கயும் லோக்கல் பாலிடிக்ஸ் தான்.  . சிலர் வசதி, உத்யோகம் அப்படிங்கற காரணத்தால் ஊரை விட்டு போனாங்க. . ஊரை விட்டு போன அந்த தலைமுறை ஆட்கள் உயிரோடு இருக்கும் வரை வருடத்தில் ஒருநாளாவது எட்டி பார்த்தாங்க. ஆனால் அடுத்த தலைமுறை ஆட்களோ அந்த ஊருக்கும் நமக்கும் என்ன தொடர்பு? தேவையில்லாம அந்த ஊருக்கு எதுக்காக போகணும். அது வேற தண்ட செலவு அப்படின்னு சொல்லிட்டு  ஊர் பக்கம் போறதையே விட்டுட்டாங்க. ஊர்ல ஆட்கள் இருந்த வரை கோவில் நிலம் வருமானம் ஒழுங்கா வந்து பூஜை நடந்தது. ஆட்கள் ஊரை விட்டு போனதும் கோவில் அரசாங்கம் கைக்கு போச்சு. வருமானமா வரவேண்டிய நெல் வராமல் போச்சு. ஸ்வாமி பட்டினியானார்.

 

ஸ்வாமிய நம்பின குருக்களும், அக்ரஹாரத்து ஜனங்கள நம்பின வாத்யாரும் பட்டினியானார். இந்த கஷ்டம் தன்னோட போகட்டும் ன்னு தான் அடுத்த தலைமுறை கோயில் கைங்கர்யம், வைதீகம்ன்னு வரவேண்டாம்ன்னு முடிவு செய்தார். கோவிலும் சிதிலமடைந்து கூட கோபுரமா இருந்த கோவில் எல்லாம் குட்டிச்சுவரா போச்சு

 

சரி இதுக்கு இப்ப என்ன செய்ய ன்னு கேட்டா அடிக்கடி சொல்ற அதே பழைய கதை தான் பரமாச்சார்யா சொன்ன மாதிரி ஒரு குடும்பத்தார் ஒரு நாளைக்கு ஒரு பிடி அரிசி ஒரு ரூபாய் பணம் (பத்து ரூபாய் கூட எடுத்து வைக்கலாம். மனசு தான் காரணம்) இதே மாதிரி அந்த ஊர்காரங்க பத்து பேர் சேர்ந்து செய்தாலே ஓரளவு அரிசியும் சொற்ப பணமும் அந்த கோவிலுக்கு என வந்து சேரும்.  இப்படி முயற்சி செய்தாலே பல கோவில்ல முதற்கட்டமா ஒரு வேளை பூஜையாவது நடக்கும்...

எதையுமே செய்யாமல் நேபாளத்தில் இருக்குற ஸ்வாமி, காஷ்மீர்ல இருக்குற ஸ்வாமின்னு போட்டோவா தினமும் வாட்சாப்ல ஷேர் பண்றதுல ஒரு பிரயோஜனமும் இல்ல. நாம நம்ம ஊர் ஸ்வாமிக்கு ஸ்ரத்தையா பூஜை செய்தால் பாண்டுரங்கன் எந்த ரூபத்தில் த்யானம் செய்தாலும் அதே ரூபத்தில் வருவனாம். அது மாதிரி நம்ம ஊர் ஸ்வாமியும் அதே ரூபத்தில் நிச்சயம் காட்சி தருவார்.

 

ஒரு கை எண்ணெய், ஒரு குடம் ஜலம், ஒரு உருண்டை தளிகை, ஒரு ஹாரத்திக்கு தான் நம்ம ஊர் ஸ்வாமி காத்துண்டு (ஏங்கிட்டு) இருக்கார் அப்படிங்கறதை மட்டும் மனசுல வச்சுக்கோங்க.

 

அது நம்ம ஊர் ஸ்வாமி. நம்ம வீட்டு ஸ்வாமின்னு நினைப்பு வந்தால் தான் இதுக்கு விமோசனம்.நாம மட்டும் சாப்பிடறோம் நம்ம ஊர் ஸ்வாமி சாப்பிடுகிறாரா இல்லையான்னு நமக்கு கவலை, நினைப்பு வந்தாலே போதும். ஸ்வாமி நம்மை நோக்கி வர ஆரம்பிச்சிடுவார்.

சொல்லணும்னு தோணிற்று.



No comments:

Post a Comment